| இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை |
| சென்னை ஐ.ஐ.டி., 1959ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மொத்தம் 250 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.,யில் 460 பேராசிரியர்களும், 4 ஆயிரத்து 500 மாணவர்களும், ஆயிரத்து 250 நிர்வாக ஊழியர்களும் உள்ளனர். கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோசனை என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அறிவியல், பொறியியல் சம்பந்தப்பட்ட15 துறைகள், சில ஆராய்ச்சி மையங்கள், 100 ஆய்வக்கூடங்கள் ஆகியவற்றுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரமிக்க ஆசிரியர்கள், புத்திகூர்மையான மாணவர்கள், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள், சிறந்த நிர்வாகம் என சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகிறது. இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,): பி.டெக்., / எம்.டெக்., டியூயல் டிகிரி: கட்டண விபரம்: தொடர்புகொள்ள: நன்றி: தினமலர் கல்விமலர்.கொம் |
Wednesday, February 10, 2010
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்
புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.உலகில், மொபைல் போன் சந்தையில் குறிப்பிட்ட இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு திட்டங்களை, பல மொபைல் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் இப்போது, கொசுவை விரட்டும் ரிங்டோன்கள் பிரபலமாகி வருகின்றன.
மனிதனின் காதால் கேட்க முடியாத அள வுக்கு மெல்லிய ஒலி அலைகள் கொண்ட ரிங்டோன்கள் மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும். இந்த ரிங்டோன்கள், மொபைல் போன் வைத்திருப்பவரைச் சுற்றி ஒரு மீட்டர் தூரத்துக்கு கொசுவை அண்டவிடாமல் துரத்தி விடும்.இதுபோன்ற மொ பைல் போன்களை "மைக்ரோவேவ் இன்பர் மேட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனமும், வேறு சில நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.
மேலும், www.gackoandfly.com , www.jetcityorange.com ஆகிய வெப்சைட்டுகளும் இதுபோன்ற ரிங்டோன்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து தருகின்றன.
ஆபாச வெப்சைட்களுக்கு தடை வருமா?
புதுடில்லி : ""ஆபாச வெப்சைட்கள் மற்றும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடும் வெப்சைட்களையும் தடை செய்ய மத்திய அரசு பரிசீலிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தகவல் உரிமை சட்டத்தை திருத்தலாமா என்று யோசித்து வருகிறது.
டில்லியில், சைபர் சட்ட அமலாக்க நிகழ்ச்சி மற்றும் தேசிய கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக தன் வேதனையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய கருத்துக்களில் முக்கியமான சில: இந்தியாவில் இணையதளங்கள் மூலமான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. போலியான பெயர்களில் குற்றவாளிகள் இவற்றில் ஈடுபடுவதால் புலனாய்வு ஏஜன்சிகளுக்குத் தவறான தகவல்கள்தான் கிடைக்கின்றன. ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதிகரித்து விட்டன. அவற்றில் அத்துமீறல்களும், அப்பாவிகளை சிக்க வைத்து வியாபாரமாக்கும் மோசடிகளும் நடக்கின்றன. இது தவிர, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பேச்சுக்களை வெளியிடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு விஷயம் பற்றியும் கேவலமான விமர்சனங்களை வெளியிடும் சுதந்திரமும் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட விஷயம் குறித்து தவறான பிரசாரம் செய்யவும் வளைத்தளங்கள் வழிவகுக்கின்றன.
ஆபாச மற்றும் தவறான கருத்துக்களை பரப்புவதில் ஈடுபடும் வெப்சைட்களால் சமுதாயத்தில் பெரும் சீரழிவுக்கு வழி ஏற்படுகிறது; தவறான கருத்துக்களால் பல்வேறு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்வது பற்றி மத்திய அரசு யோசிக்க வேண்டும். இதற்காக, எல்லா இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; வெப்சைட்களை நடத்துவோர் வேறு; அதை இயக்குவோர் வேறு. அவர்களை அடையாளம் கண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்சைட்களில் உள்ள விவரங்களால் சில சமயம் பாதிப்பும் வருகிறது என்பதற்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும். சுப்ரீம்கோர்ட் இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கு எண் முதற்கொண்டு விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று வெளிப்படையாக சில தகவல்களை வெளியிட்டால், நெட் திருடர்கள் வங்கிக் கணக்கைச் சூறையாட வசதியாகப் போய்விடுகிறது.
இப்படி இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்ட சில நாட்கள் கழித்து ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், நீதிபதிகளின் வங்கிக் கணக்கு எண்களை நான் உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்கும் உள்ளவர்களுடன் பேச, தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக உள்ளது கம்ப்யூட்டர் இன்டர்நெட் என்றாலும், எந்த அளவுக்கு அதனால் பலன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு தீமையும் உள்ளது. எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்லது உள்ள அளவு, கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது. கம்ப்யூட்டர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள முடிகிறது என்றாலும், தவறான வழிகளில் ஆதாயம் சேர்ப்போர், அதை தவறாக பயன்படுத்தவே நினைக்கின்றனர். இதுபோன்ற வசதிகள் மக்களைச் சுரண்டாமல், துன்பப்படுத்தாமல் இருக்கும் வகையில் சட்டரீதியான அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சிகள் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,"சர்வதேச அளவில் உள்ள சட்ட நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப, இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்ய முடியுமா என்பது ஆராயப்படும்; மேலும், தகவல் உரிமை சட்டத்தில் இது தொடர்பாக மாற்றம் கொண்டுவந்து, தவறுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோர், இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் கவர்னர்
ஐதராபாத் : செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இச்சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. ஆனால், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், கட்டியை அகற்ற, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் நரசிம்மனின் இடது தொடையில், சிறிய கட்டி ஏற்பட்டது. "பெடங்குலேடெட் டெர்மோலைபோமா' என கூறப்படும் இக்கட்டியால், சிரமப்பட்டு வந்தார். அவரது தனி டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் காலை, மனைவி விமலாவுடன் மருத்துவமனைக்கு வந்த கவர்னரை, மருத்துவத் துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார், காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்குமார், பிளாஸ்டிக் சர்ஜன் மோகனகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று, "அட்மிட்' செய்தனர். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அரை மணி நேரத்தில், இடது தொடையில் இருந்த கட்டியை அகற்றினர். அரை மணி நேரம் ஓய்வெடுத்த கவர்னர் நரசிம்மன், மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார்.
டாக்டர் ரமேஷ்குமார் கூறுகையில், "ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வரும் அரசு மருத்துவமனை மீதுள்ள நம்பிக்கையால், கவர்னர் இங்கு சிகிச்சை பெற்றது முழு திருப்தி அளிக்கிறது' என்றார்.பின்பற்றுவரா அரசியல்வாதிகள்...: சிறு வியாதி என்றாலும், தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் அரசியல்வாதிகள் மத்தியில், மாநிலத்தின் முதல் குடிமகனாக விளங்கும் கவர்னர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகளும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகளின் தரம், வெளி உலகிற்கு தெரியவரும்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் 2 லட்சம்
வாஷிங்டன் : "அமெரிக்காவில், இரண்டு லட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கியிருக்கின்றனர்' என, 2009ம் ஆண்டு சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அமெரிக்காவில், 2008ம் ஆண்டு 1.60 லட்சம் இந்தியர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தனர். கடந்தாண்டு, சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையில், 40 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதாவது, 2008ம் ஆண்டு, 1.16 கோடியாக இருந்த, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு, 1.08 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், அங்கு சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, எல் சால்வடார், கவுதமாலா, ஹோண்டுரா, பிலிப்பைன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் மெக்சிகோ நாட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 9, 2010
ஆசியாவின் முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ யு.பி.இ.எஸ்
ஆசியாவின் முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ யு.பி.இ.எஸ்., - 09-02-2010 |
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகம் (யு.பி.இ.எஸ்.,) இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ என்ற பெருமை பெற்றது. |
| இது உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. டேராடூன், குர்கான் மற்றும் ராஜமுந்திரி என மூன்று இடங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயில் அன்டு கேஸ், பவர், டிரான்ஸ்பெடேசன், இன்பிராஸ்டிரக்சர், லாஜிஸ்டிக்ஸ் அன்டு சப்ளை செயின் செக்டார்ஸ் பற்றிய 35 பாடப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி பற்றிய சட்டப் படிப்புகள் மற்றும் மேலாண்மை படிப்புகள் பற்றிய துறைகளும் உள்ளன. பாடப்பிரிவுகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., பி.பி.ஏ., மற்றும் எல்.எல்.பி., போன்ற பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. எம்.பி.ஏ., பிரிவுடன் சேர்ந்த பி.டெக்., இன்டகிரேட்டேடு பாடப்பிரிவும் இங்கு உள்ளது. பி.டெக்., பாடப்பிரிவுகள் எம்.பி.ஏ.,வுடன் சேர்ந்த பி.டெக்., பிரிவுகள் எம்.டெக்., பாடப்பிரிவுகள் எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள் பி.பி.ஏ., பாடப்பிரிவுகள்: எல்.எல்.பி., பாடப்பிரிவு பணி வாய்ப்புகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியத்துறையில் படித்தவர்களுக்கு ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்களில் சிறப்பான வேலைவாய்ப்பு உள்ளது. இன்ஜினியரிங் பிரிவுடன் மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு பவர் கார்ப்பரேஷன்கள், பவர் உற்பத்தி நிலையங்கள், கன்சல்டன்சிகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. பெட்ரோலியம் உற்பத்தி நாடுகளில் இவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் போன்ற பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இப்பல்கலைக்கழகம் யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமை பெற்றது. பிரிட்டனில் உள்ள எனர்ஜி இன்ஸ்டிடியூட்டை பின்பற்றி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் எனர்ஜி பல்கலைக்கழகம் இதுதான். இந்தியாவில் முதல் முதலாக இங்குதான் பயோ - டீசல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் எஸ்.ஏ.பி., தொழில்நுட்பமும் இந்த நிறுவனத்தில் தான் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களை |
வேகமாக முன்னேறுகிறது இந்தியா : மத்திய புள்ளியியல் துறை தகவல்
சென்னை :"பொருளாதார மந்த நிலையிலிருந்து வேகமாக மீண்டுவரும் நாடுகளில் சீனாவை தொடர்ந்து இந்தியா, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 6.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது 7.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல்பாதியில் மந்தமாக காணப்படும் ஜி.டி.பி., வளர்ச்சி, வருடத்தின் பிற்பகுதியில் வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது' என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு விவசாயத் துறையில் வளர்ச்சி 1.6 சதவீத இழப்பும், நடப்பு வருடத்தில் இழப்பு 0.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் கடந்த ஆண்டு 3.2 சதவீத வளர்ச்சியும், நடப்பு வருடம் 8.9 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று தெரிகிறது.ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் 6.5 சதவீத வளர்ச்சியும், நிதியுதவி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரத் துறையில் 10.1 சதவீத வளர்ச்சியும் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், சமூகம் மற்றும் தனிப்பட்ட மனிதர்களுக்கான செலவுகள் கடந்தாண்டு 13.9 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு 9.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு உணவுப்பொருள் விலை ஏற்றத்திற்கு காரணம், பருவம் தவறி பெய்த மழையால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிப்படைந்ததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய புள்ளியியல் துறையை தவிர்த்து, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆய்வின்படி நடப்பு ஆண்டு ஜி.டிபி., வளர்ச்சி 7.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியின் ஆய்வுப்படி 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத்தது.எந்தெந்த ஊர்கள் வழியாக எடுத்துச் செல்வது, எந்த இடத்தில் குழாய்களை பதிப்பது போன்ற விவரங்கள், இறுதி செய்யப்பட்டன. இதற்கான அனுமதி, 2007ம் ஆண்டு, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளித்தது. கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், இந்த எரிவாயு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தின் பங்காக, நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஸ்டாண்டர்டு சதுர மீட்டர் அளவு, எரிவாயு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, திருச்சி, நாகை, புதுக்கோட் டை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு, எரிவாயு வழங்கும், "சிட்டி காஸ்' திட்டமும் அறிவிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்படும் மின்திட்டங்களுக்கும் எரிவாயு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு நிபந்தனை விதித்தது.திடீரென, 2007ம் ஆண்டு, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையம் என்று புதிதாக ஒரு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது.தமிழகத்திற்கு எரிவாயு வழங்கும் திட்டத்தை, இந்த ஆணையம் பரிசீலித்தது. எந்த முடிவும் எடுக்காமல், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. 2009ம் ஆண்டு ஜூனில், "சிட்டி காஸ்' வழங்கும் திட்டத்திற்கு மட்டும், ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
உ.பி.,யில் மதுரா, மீரட், ஆக்ரா, புலந்த்சர், ராஜஸ்தானில் கோட்டா, அஜ்மீர், அரியானாவில் சோன்பேட், ம.பி., யில் திவாஸ், ஆந்திராவில் காக்கிநாடா உட்பட 13 நகரங்களுக்கு எரிவாயு அளிக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தன் மாநிலத்தில் உள்ள ஒரு நகருக்காவது எரிவாயு கொடுக்க வேண்டும் என சண்டை போட்டதால், கிடைத்தது; இல்லையெனில், கிடைத்திருக்காது. தமிழக நகரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்டில், ஒரு பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இந்த எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, தொடரப்பட்ட அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், எரிவாயு பகிர்ந்து வழங்கும் அதிகாரம், பெட்ரோலிய ஒழுங்கு முறை ஆணையத்திற்கு இல்லை என்று கூறி தீர்ப்பளித்து விட்டது.
இதற்கிடையே முதல்வர் கருணாநிதி, தமிழகத்துக்கு எரிவாயு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர், சோனியா ஆகியோருக்கு, நான் கைந்து கடிதங்கள் எழுதினார்.டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.இரு தினங்களுக்கு முன், பெட்ரோலிய அமைச்சக செயலர் சுந்தேரசனை, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மான்சிங் சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டாமென்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால், அங்கு வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு சொல்ல ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், கிருஷ்ணா - கோதாவரி எரிவாயு திட்டமே திசை மாறிப் போக வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.
காவிரியும், எரிவாயுவும் : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பு அளித்தது. இதை அமல்படுத்தாமல், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதன் விளைவு, தமிழகத்தின் சோகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை.ஒரு பிரச்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றாலே அது, இழுத்தடிக்கும் தந்திரம்தான். காவிரி பங்கீடு எப்படி முடங்கி கிடக்கிறதோ அதேபோலதான் தற்போது எரிவாயு பங்கீடும் முடங்கும் நிலையை அடைந்துவிட்டது.
குழாய்கள் மூலம் குஜராத்துக்கு தான்: துணை முதல்வர் ஸ்டாலின் இம்முறை டில்லிக்கு வந்திருந்தபோது பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்தார். டில்லியில் பல முறை நிருபர்களை சந்தித்தபோதெல்லாம் திரும்ப திரும்ப அவர் கூறிய விஷயம், "கிருஷ்ணா - கோதாவரி படுகை எரிவாயுவை தமிழத்துக்கு தர வேண்டுமென்று வலியுறுத்தினேன்' என்பது தான். ஏற்கனவே குழாய்கள் பதிக்கப்பட்டு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பங்கை தருவது குறித்து, ஒழுங்குமுறை ஆணையம், சுப்ரீம் கோர்ட் சென்று திரும்பிய பிறகே தெரியும். இந்நிலையில், தமிழகத்திற்கு எரிவாயு என்பது எட்டாக்கனி தான்.
மாசில்லா நகரங்கள்: எரிவாயு மட்டும் தமிழகத்திற்கு கிடைத்துவிட்டால், ஏற்கனவே திட்டமிட்டிருக்கும் நகரங்களில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் சி.என்.ஜி.,க்கு மாறிவிடும். அனைத்து நகரங்களுமே மாசுகட்டுப்பாடு கொண்ட நகரங்களாக மாறிவிடும். காற்று மாசுபடாமல், கார்பன் புகை இல்லாமல் சுற்றுச்சூழல் மேம்படும். எரிவாயுவை பயன்படுத்தி தற்போதைக்கு இந்தியாவிலேயே சி.என்.ஜி.,யால் வாகனங்கள் இயக்கப்படுவது டில்லியில் மட்டும் தான். "சிட்டி காஸ் சப்ளை' திட்டம், டில்லி, மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் தான் செயல்படுகிறது
ஸ்டேட்போர்டா ? சி.பி.எஸ்.இ.,யா? பெற்றோர் குழப்பம்
உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் உடைய மிகப் பெரிய மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக, பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை கேட்டு வருகின்றன.
"ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என பெற்றோரிடம் மெட்ரிக் பள்ளிகள் கேட்டு வருவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு வரும் கல்வி ஆண்டிலும், அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது."இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பாடத் திட்டங்கள் தரமானதாக இருக்கும்' என்று, தமிழக அரசும், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் பலமுறை வாக்குறுதி அளித்தாலும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிடையே குறிப்பாக, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரிய பள்ளிகளிடையே ஒருவித தயக்கம் நிலவுகிறது. இந்த பள்ளிகளின் பெற்றோரிடமும் தயக்கம் இருக்கிறது.
அரசு பள்ளிகளில் நடத்தப்படும் அதே பாடத்திட்டத்தை மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் நடத்தினால், வித்தியாசம் இருக்காது என்றும், அப்படி நடத்தினால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் என்றும், தனியார் பள்ளிகள் கருதுகின்றன. இதனால், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவது குறித்து, பல பள்ளிகள் ஆலோசித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சில மெட்ரிக் பள்ளிகள், பள்ளி வளாகத்திற்குள் புதிதாக சி.பி.எஸ்.இ., பள்ளியை துவக்க நடவடிக்கை எடுத்துள்ளன.இதற்கிடையே, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என, பெற்றோரிடம் கடிதம் கொடுத்து, பல பள்ளிகள் கருத்துக்களை கேட்டு வருகின்றன. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ரிக் பள்ளி, பெற்றோருக்கு நோட்டீஸ் வினியோகித்து, கருத்து கேட்டுள்ளது.
அப்பள்ளி விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருவதையொட்டி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளும், "ஸ்டேட் போர்டின்' கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தை பெறுவது குறித்தும், பள்ளி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.ஸ்டேட் போர்டிலேயே தொடர்ந்து இருக்கலாமா அல்லது சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறலாமா என்பது குறித்து, பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என கேட்டுள்ளதால், பெற்றோர், குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறும்போது, "விசாலமான இடமும், உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவதற்கு முடிவெடுத்துள்ளன. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுவிடுவோம் என்று கூறி, சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. எந்த முறையின் கீழ் பள்ளியை நடத்துவது என்பது குறித்து, பள்ளி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பெற்றோரை குழப்பும் வகையில் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன' என்றார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க வேண்டுமெனில், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.,) பெற வேண்டும். சமச்சீர் கல்வி அமலாவதன் எதிரொலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பினால், அதை தமிழக அரசு ஏற்காது என்று தெரிகிறது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதுவரை என்.ஓ.சி., கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதிகமான தனியார் பள்ளிகள், வேறு கல்வி முறைக்கு மாற விரும்பி, என்.ஓ.சி., கேட்டு விண்ணப்பித்தால், அது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை செய்தபிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Monday, February 8, 2010
பள்ளிக்கு மொபைல் எடுத்துப் போனால் சவுக்கடி
தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக் கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலை வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை கொண்டு வந்த போது, அது குறித்து மாணவர்கள் பலமான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று அது கண்டும் காணாமல் விடப்படுகிறது. ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றில் இந்த தடை மிகவும் கவனமாகப் பின்பற்றப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் மாணவர் களின் மொபைல் போன்கள், படிப்பு முடித்துவிட்டுச் செல்லும்போதுதான் திரும்பத் தரப்படுகிறது.
பள்ளி ஒன்றில் மொபைல் போன் கொண்டு சென்றதற்காக, 13 வயது மாணவி ஒருத்திக்கு 90 கசையடிகளும் இரண்டு மாதத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அல்ல; சவுதி அரேபியாவில். பெண்கள் பயிலும் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
லண்டன்: தங்களது எதிர்கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக இத்தாலியர்கள் ஜோதிடத்துக்காக அதிகம் செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் மீண்டும் தங்கள் பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஜோதிடர்களை நாடுகின்றனர். சீட்டு போட்டு பார்ப்பது, சோழியை உருட்டி எதிர்காலத்தை கணிப்பது என்பது போன்ற பல்வேறு முறைகளில் இவர்கள் தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.
கிட்டதட்ட 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோதிட பலனுக்காக செலவிட்டுள்ளனர். குறிப்பாக மிலன் மற்றும் லேசியோ பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் ஜோதிடம் பார்த்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதி ஜோதிடர்களுக்கு ஓராண்டில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.இதில், 40 வயதுகளில் உள்ள நபர்கள் தான் ஜோதிடம் அதிகம் பார்த்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர்
சென்னை : ""தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,'' என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார்.சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் தொல்லியல் துறை கருத்தரங்கு நேற்று நடந்தது. இதைத் தொல்லியல்துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசியதாவது: நமது எழுத்து வளர்ச்சி எங்கு துவங்கியது என்ற கேள்வி உள்ளது. சிந்து எழுத்திலிருந்து வந்ததா அல்லது இந்த சிந்து எழுத்து இடையில் வந்ததா என்ற கேள்வியும் உள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் செம்பியன் கண்டியூரில்கிடைத்த கல்வெட்டில் நான்கு குறியீடுகள் கிடைத்தன. சிந்து எழுத்து குறியீடுகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறியீடுகளை வைத்து காலத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும், எதை உணர்த்துகிறது என்று தெளிவாக தெரியவில்லை. சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.
நிகழ்ச்சியில், "சிந்து எழுத்தும் தமிழியும்- ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பில், சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா பேசியதாவது: சிந்து எழுத்து முறை, படங்களை அடிப்படையாக கொண்டது என்கின்றனர். இது முழுவதும் படங்களால் ஆன எழுத்துக்கள் அல்ல. முழுமையாக எல்லா எழுத்தும் செயற்கை வடிவங்களால் ஆனது. செயற்கை வடிவம் மட்டுமல்லாமல், வடிவியல் கணித அடிப்படையில் வடிவங்களாக சிந்து எழுத்துக்கள் உள்ளன. இதற்கு காரணம் சிந்துவெளி மக்கள், நகர அமைப்புகளை வடிவமைக்கும் கட்டடக் கலையில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி எழுத்துகளுக்கு செயற்கையான வடிவங்களை அமைத்தனர். எனவே, இந்த வடிவங்களுக்கு கொடுத்த பொருள் பொருந்தாமல் போய்விட்டது.
இந்த சிந்து எழுத்து வடிவங்கள் தமிழி என்ற எழுத்து வடிவங்களுடன் பொருந்துகின்றன. இரண்டையும் ஒப்பிட்டு சிந்து எழுத்தை படிக்க முயற்சிக்கலாம் என்பது உறுதி. தமிழகத்தில் சிந்து எழுத்து வடிவங்கள் பெருமுக்கல், கீழ்வாலை, பொதிகைமலை குகை, இலங்கையில் யாழ்பாணத்தில் ஆணைக்கொட்டடி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும் என்பது உறுதி. இவ்வாறு பூரணசந்திர ஜீவா பேசினார்.
Sunday, February 7, 2010
நோயாளிக்கு ஆயுள் அதிகமாம்: டாக்டருக்கு தான் குறைவாம்
மும்பை:எல்லோரது நோய்களையும் நீக்கி வாழ்வு தரும் டாக்டர்களின் ஆயுசு,சராசரி மக்களை விட கம்மிதான் என்றால் நம்ப முடிகிறதா...? சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இத்தகவலை தெரிவித் துள்ளது.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ.,)த்தின் புனே பிரிவு, "சமூகப் பாதுகாப்புத் திட்டம்' என்ற நிகழ்ச்சியின் கீழ் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 5,500 டாக்டர்களும், இந்தியா முழுவதும் 11 ஆயிரம் டாக்டர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.ஐ.எம்.ஏ.,யின் புனே பிரிவுத் தலைவர் டாக்டர். சாரதா இந்த ஆய்வு பற்றிக் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரி இந்தியனை விட ஒரு டாக்டரின் ஆயுள் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.சராசரி இந்தியர் 69 லிருந்து 72 வயது வரை வாழ்கிறார். ஆனால் டாக்டர் 55 லிருந்து 59 வயது வரைதான் வாழ்கிறார்.டாக்டர்களில் பெரும்பாலோர் மாரடைப்பால் தான் மரணம் அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிராவில் 12 லிருந்து 15 டாக்டர்களும், இந்தியாவில் 30 டாக்டர்களும் 59 வயது வரைதான் வாழ்கின்றனர்.இதற்கு, மனஅழுத்தம், ஒரு நாளில் பெரும் பான்மையான நேரங்களில் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது ஆகியவைதான் காரணம்.இதன் விளைவாக, உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் ஆயுள் குறைந்து விடுகிறது.இவ்வாறு டாக்டர். சாரதா தெரிவித்தார்.இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, ஐ.எம்.ஏ., சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையிலுள்ள கைவல்ய யோகா இன்ஸ்டிடியூட், கிருத பாரதி, தேசிய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகம், ஆயுர்வேத வியாசபீடம் இவற்றோடு இணைந்து, புனேயிலுள்ள ராமன் பாக்., மைதானத்தில், கடந்த ஓர் ஆண்டுக் காலமாக சூரிய நமஸ்கார் பயிற்சியை டாக்டர்களுக்காக ஐ.எம்.ஏ., நடத்தி வருகிறது.இதுபோக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், மனஅழுத்த மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் குறித்த செமினார் ஆகியவற்றையும் ஐ.எம்.ஏ.,நடத்த உள்ளது.
வேலை, பணம் தான் முக்கியம்:
புதுடில்லி:"எங்களுக்கு வேலை தான் முக்கியம்; கைநிறைய சம்பாதித்து விட வேண்டும்; அப்புறம் தான் குழந்தை பற்றிய நினைப்பு வரும்' என்று நினைக்கும் இளம் தம்பதியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மனித வாழ்வில், திருமணம் மற்றும் , அதன் பின் குழந்தைப் பேறு என்பது மகிழ்ச்சியின் உச்சகட்டம் எனலாம்.ஆனால் தற்காலப் பொருளாதாரப் போட்டி உலகம், கண்ணிழந்தவன் பெற்ற செல்வம் போல, எல்லாம் இழந்த பின் தான் மனிதனை வாழ்க்கையைப் பற்றி நினைக்கத் தூண்டுகிறது. அந்த அளவுக்கு பணத்துக்கும் , வேலைக்கும் தான் முக்கியத்துவம் தரும் போக்கு அதிகரித்து விட்டது.வேலைக்குச் செல்லும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் குடும்பக் கட்டுக் கோப்பு குலைந்தது என்னவோ உண்மை. அதன் அடுத்த விளைவாக வேலைக்குச் செல்லும் தம்பதிகள், வேலையில் நல்ல நிலைமை அடைந்த பின்தான் குழந்தைப் பேறு பற்றியே சிந்திக் கின்றனர்.பொருளாதாரச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் இவற்றையடுத்து வேலைவாய்ப்பு பற்றிய கவலை இவை மூன்றும்தான் இன்று குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி தம்பதிகளை சிந்திக்க வைக்கும் முக்கிய காரணிகளாகியிருக்கின்றன.
இதுகுறித்து, இந்திய ஆலோசனைக் கழகத்தின் தலைவர் வசந்தா பத்ரி கூறுகையில்,"இந்தத் தம்பதிகள் தங்கள் மணவாழ்வின் ஆரம்பக்கட்டத்தில் குழந்தைப் பேற்றின் அருமை பற்றி உணர்வதில்லை.காலம் கடந்த பின், வாழ்வில் தனிமையை உணரும்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்' என்கிறார்.அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ தலைமை டாக்டர் அனிதா கவுல் கூறுகையில்,"கடந்த 35 ஆண்டுகளாக என்னிடம் வரும் நோயாளிகளில் 50 சதவீதத்துக்கு மேல் 35 வயதைக் கடந்தவர்கள். தங்கள் 40 வயதில்தான் பெண்கள் குழந் தைப் பேறு பற்றி நினைத்து என்னிடம் வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்பவர் கள்தான். தங்கள் வேலையில் வெற்றி ஈட்டிய பின் தான் இவர் கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்கின்றனர்' என்கிறார்.மற்றொரு டாக்டர் பிதிகா பட்டாச்சார்யா கூறுகையில்,"தாமதமாகக் கருவுற்றவர்களாக என் னிடம் வருபவர்களில் அநேகர் தங்கள் வேலைக்காகக் குழந் தைப் பேற்றைத் தள்ளிப் போட்டவர்கள்தான்.பெண்களுக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளில் பல்வேறு மன,உடல் பிரச்னைகள் வருகின்றன. இவை பிறக்கப் போகும் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தை "தாமதச் செயல்பாடு'(டவுன் சிண்ட் ரோம்), குரோமோசோம்களில் பிரச்னை என்பவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்' என் கிறார்.