மும்பை:எல்லோரது நோய்களையும் நீக்கி வாழ்வு தரும் டாக்டர்களின் ஆயுசு,சராசரி மக்களை விட கம்மிதான் என்றால் நம்ப முடிகிறதா...? சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இத்தகவலை தெரிவித் துள்ளது.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ.,)த்தின் புனே பிரிவு, "சமூகப் பாதுகாப்புத் திட்டம்' என்ற நிகழ்ச்சியின் கீழ் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 5,500 டாக்டர்களும், இந்தியா முழுவதும் 11 ஆயிரம் டாக்டர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.ஐ.எம்.ஏ.,யின் புனே பிரிவுத் தலைவர் டாக்டர். சாரதா இந்த ஆய்வு பற்றிக் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரி இந்தியனை விட ஒரு டாக்டரின் ஆயுள் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.சராசரி இந்தியர் 69 லிருந்து 72 வயது வரை வாழ்கிறார். ஆனால் டாக்டர் 55 லிருந்து 59 வயது வரைதான் வாழ்கிறார்.டாக்டர்களில் பெரும்பாலோர் மாரடைப்பால் தான் மரணம் அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிராவில் 12 லிருந்து 15 டாக்டர்களும், இந்தியாவில் 30 டாக்டர்களும் 59 வயது வரைதான் வாழ்கின்றனர்.இதற்கு, மனஅழுத்தம், ஒரு நாளில் பெரும் பான்மையான நேரங்களில் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது ஆகியவைதான் காரணம்.இதன் விளைவாக, உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் ஆயுள் குறைந்து விடுகிறது.இவ்வாறு டாக்டர். சாரதா தெரிவித்தார்.இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, ஐ.எம்.ஏ., சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையிலுள்ள கைவல்ய யோகா இன்ஸ்டிடியூட், கிருத பாரதி, தேசிய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகம், ஆயுர்வேத வியாசபீடம் இவற்றோடு இணைந்து, புனேயிலுள்ள ராமன் பாக்., மைதானத்தில், கடந்த ஓர் ஆண்டுக் காலமாக சூரிய நமஸ்கார் பயிற்சியை டாக்டர்களுக்காக ஐ.எம்.ஏ., நடத்தி வருகிறது.இதுபோக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், மனஅழுத்த மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் குறித்த செமினார் ஆகியவற்றையும் ஐ.எம்.ஏ.,நடத்த உள்ளது.
Blog Archive
Sunday, February 7, 2010
நோயாளிக்கு ஆயுள் அதிகமாம்: டாக்டருக்கு தான் குறைவாம்
வேலை, பணம் தான் முக்கியம்:
புதுடில்லி:"எங்களுக்கு வேலை தான் முக்கியம்; கைநிறைய சம்பாதித்து விட வேண்டும்; அப்புறம் தான் குழந்தை பற்றிய நினைப்பு வரும்' என்று நினைக்கும் இளம் தம்பதியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மனித வாழ்வில், திருமணம் மற்றும் , அதன் பின் குழந்தைப் பேறு என்பது மகிழ்ச்சியின் உச்சகட்டம் எனலாம்.ஆனால் தற்காலப் பொருளாதாரப் போட்டி உலகம், கண்ணிழந்தவன் பெற்ற செல்வம் போல, எல்லாம் இழந்த பின் தான் மனிதனை வாழ்க்கையைப் பற்றி நினைக்கத் தூண்டுகிறது. அந்த அளவுக்கு பணத்துக்கும் , வேலைக்கும் தான் முக்கியத்துவம் தரும் போக்கு அதிகரித்து விட்டது.வேலைக்குச் செல்லும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் குடும்பக் கட்டுக் கோப்பு குலைந்தது என்னவோ உண்மை. அதன் அடுத்த விளைவாக வேலைக்குச் செல்லும் தம்பதிகள், வேலையில் நல்ல நிலைமை அடைந்த பின்தான் குழந்தைப் பேறு பற்றியே சிந்திக் கின்றனர்.பொருளாதாரச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் இவற்றையடுத்து வேலைவாய்ப்பு பற்றிய கவலை இவை மூன்றும்தான் இன்று குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி தம்பதிகளை சிந்திக்க வைக்கும் முக்கிய காரணிகளாகியிருக்கின்றன.
இதுகுறித்து, இந்திய ஆலோசனைக் கழகத்தின் தலைவர் வசந்தா பத்ரி கூறுகையில்,"இந்தத் தம்பதிகள் தங்கள் மணவாழ்வின் ஆரம்பக்கட்டத்தில் குழந்தைப் பேற்றின் அருமை பற்றி உணர்வதில்லை.காலம் கடந்த பின், வாழ்வில் தனிமையை உணரும்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்' என்கிறார்.அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ தலைமை டாக்டர் அனிதா கவுல் கூறுகையில்,"கடந்த 35 ஆண்டுகளாக என்னிடம் வரும் நோயாளிகளில் 50 சதவீதத்துக்கு மேல் 35 வயதைக் கடந்தவர்கள். தங்கள் 40 வயதில்தான் பெண்கள் குழந் தைப் பேறு பற்றி நினைத்து என்னிடம் வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்பவர் கள்தான். தங்கள் வேலையில் வெற்றி ஈட்டிய பின் தான் இவர் கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்கின்றனர்' என்கிறார்.மற்றொரு டாக்டர் பிதிகா பட்டாச்சார்யா கூறுகையில்,"தாமதமாகக் கருவுற்றவர்களாக என் னிடம் வருபவர்களில் அநேகர் தங்கள் வேலைக்காகக் குழந் தைப் பேற்றைத் தள்ளிப் போட்டவர்கள்தான்.பெண்களுக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளில் பல்வேறு மன,உடல் பிரச்னைகள் வருகின்றன. இவை பிறக்கப் போகும் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தை "தாமதச் செயல்பாடு'(டவுன் சிண்ட் ரோம்), குரோமோசோம்களில் பிரச்னை என்பவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்' என் கிறார்.