ஆசியாவின் முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ யு.பி.இ.எஸ்., - 09-02-2010 |
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகம் (யு.பி.இ.எஸ்.,) இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ என்ற பெருமை பெற்றது. |
| இது உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. டேராடூன், குர்கான் மற்றும் ராஜமுந்திரி என மூன்று இடங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயில் அன்டு கேஸ், பவர், டிரான்ஸ்பெடேசன், இன்பிராஸ்டிரக்சர், லாஜிஸ்டிக்ஸ் அன்டு சப்ளை செயின் செக்டார்ஸ் பற்றிய 35 பாடப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி பற்றிய சட்டப் படிப்புகள் மற்றும் மேலாண்மை படிப்புகள் பற்றிய துறைகளும் உள்ளன. பாடப்பிரிவுகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., பி.பி.ஏ., மற்றும் எல்.எல்.பி., போன்ற பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. எம்.பி.ஏ., பிரிவுடன் சேர்ந்த பி.டெக்., இன்டகிரேட்டேடு பாடப்பிரிவும் இங்கு உள்ளது. பி.டெக்., பாடப்பிரிவுகள் எம்.பி.ஏ.,வுடன் சேர்ந்த பி.டெக்., பிரிவுகள் எம்.டெக்., பாடப்பிரிவுகள் எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள் பி.பி.ஏ., பாடப்பிரிவுகள்: எல்.எல்.பி., பாடப்பிரிவு பணி வாய்ப்புகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியத்துறையில் படித்தவர்களுக்கு ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்களில் சிறப்பான வேலைவாய்ப்பு உள்ளது. இன்ஜினியரிங் பிரிவுடன் மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு பவர் கார்ப்பரேஷன்கள், பவர் உற்பத்தி நிலையங்கள், கன்சல்டன்சிகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. பெட்ரோலியம் உற்பத்தி நாடுகளில் இவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் போன்ற பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இப்பல்கலைக்கழகம் யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமை பெற்றது. பிரிட்டனில் உள்ள எனர்ஜி இன்ஸ்டிடியூட்டை பின்பற்றி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் எனர்ஜி பல்கலைக்கழகம் இதுதான். இந்தியாவில் முதல் முதலாக இங்குதான் பயோ - டீசல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் எஸ்.ஏ.பி., தொழில்நுட்பமும் இந்த நிறுவனத்தில் தான் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களை |