Blog Archive
-
▼
2011
(12)
-
►
January
(11)
-
►
Jan 08
(11)
- இராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது
- டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்...
- ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்க...
- விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்...
- அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித...
- மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்க...
- நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது
- 1977 இல் செலுத்தப்பட்ட வொயேஜர் விண்கலம் சூரியக் கு...
- முதலாவது பால்க்கன் 9 விண்கலம் வெற்றிகரமாகச் சோதிக்...
- இந்தியச் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற ராக்கெட் வா...
- ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?
-
►
Jan 08
(11)
-
►
January
(11)
Saturday, March 26, 2011
நண்பர்களே என்னுடைய புதிய செய்தி ப்ளாக் ய் பார்வை இட தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
Saturday, January 8, 2011
இராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது
நாசாவின் மீளப்பாவிக்கப்படும் விண்ணோடத்தை (space shuttle) ஒத்த X-37B என்ற இந்த விண்வெளி வானூர்தி வியாழக்கிழமை அன்று கேப் கனவரல் வான் படைத்தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 1952 (2352 GMT) மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
ஆளில்லாமல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அமெரிக்க வண்வெளித் திட்டத்தில் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விண்வெளியில் மேற்கொள்ளும் பரிசோதனைத் தரவுகளை மேலதிக ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பும்.
9மீ நீளமும் 4.5மீ மொத்த அகலமும் கொண்ட இந்த மீளப் பாவிக்கப்படத்தக்க வானூர்தி விண்ணோடங்களுடன் ஒப்பிடும் போது அவற்றின் நான்கில் ஒரு அளவையே கொண்டுள்ளது. சுற்றுப்பாதை மாற்றத்திற்காக இதன் எந்திரம் வானூர்தியின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இராணுவ வானூர்தி விண்ணோடங்களைப் போலல்லாது, லித்தியம்-அயன் மின்கலங்களையும், சூரிய ஆற்றலையுமே தனது இயக்கத்துக்கு பாவிக்கிறது.
இத்திட்டத்தின் செலவு, மற்றும் நோக்கம் போன்றவை வெளிப்படுத்தப்படவில்லை.
X-37B என்ற இந்த விண்கலம் 270 நாட்கள் வரை பூமியைச் சுற்றிவரும் ஆற்றல் கொண்டது. ”இது எப்போது திரும்பி வரும் என்று எமக்கு உறுதியாகத் தெரியாது. இது மேற்கொள்ளும் பரிசோதனைகளின் வெற்றியிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது," என்றார் அமெரிக்க வான் படையின் பேச்சாளர் காரி பேய்ட்டன்.
X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம்
டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்
செப்டம்பர் , 2010
ஐக்கிய அமெரிக்காவில் "டிஸ்கவரி சானல்" தலைமையகத்தில் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பணயக் கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேரிலாந்தில் உள்ள தலைமையகக் கட்டிடத்தினுள் கைத்துப்பாக்கியுடனும், வெடிபொருட்களை உடலில் கட்டியவண்ணமும் நேற்று பிற்பகல் அந்த நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்நபர் வெடிபொருட்களை வெடிக்க வைக்க இருந்த நேரத்திலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜேம்ஸ் ஜேய் லீ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதுடையவர். இவர் கட்டிடத்துக்கு வெளியே பல தடவைகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் சான் டியேகோவைச் சேர்ந்த ஜேம் லீ 2008 ஆம் ஆண்டில் டிஸ்கவரி தலைமையகத்தின் முன்னால் அந்நிறுவனத்துக்கு எதிராகக் கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுக்களை வீசி எறிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் என த கசெட் என்ற உள்ளூர்ப் பத்திரிகை தெரிவித்துள்ளது. புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி நிறுவனம் முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு ஆகும்.
savetheplanetprotest.com என்ற இணையத்தளத்தையும் அவர் பராமரித்து வந்தார். புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி சானல் உதவ வேண்டும் என அவ்விணையத்தளத்தின் மூலம் கோரி வந்தார்.
இம்மனிதரைத் தாம் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் ஆனால் “அவரது கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,” என டிஸ்கவரி பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிஸ்கவரி சானல் உலகம் முழுவதிலும் சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன
ஆகஸ்ட் 2009, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா:
நாய்கள் எவ்வாறு வளர்ப்பு நாய்களாக மாறின? நாய்களின் படிவளர்ச்சியில் எப்படி இது ஒரு தனிப் பேரினமாக வளர்ச்சியுற்றது எனப் பல கேள்விகள் அண்மையில் எழுந்துள்ளன.
வீட்டு நாயாக பழக்கப்படுத்தாமல், உலகில் பல்வேறு சிற்றூர்களில் திரியும் பல நாய்களின் மரபணுக்களை அலசியபொழுது புதிதாக நுழைந்த மரபணுக்களும், இயற்கையாக இருந்த மரபணுக்களும் கலந்து இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
இக்கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள இத்தாக்காவில் உள்ள கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆடம் பாய்க்கோ (Adam Boyko) என்பவர் செய்தார்.
இவர் ஆப்பிரிக்காவில் ஏழு வெவ்வேறு இடங்களில் இருந்து 318 நாய்களின் இழைமணி கரு டி.என்.ஏவை (மைட்டோகோண்டிரியல் நியூக்கிளியர் டி.என்.ஏ) திரட்டி எடுத்து கரிபியன் தீவுகளுக்கு அருகே உள்ள புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள தெரு நாய்கள், அமெரிக்காவின் மட் (mutt) எனப்படும் கலப்பு இன நாய்கள், மற்றும் 126 வகையான ஏற்புபெற்ற தனி நாய் இனங்கள் ஆகியவற்றின் இழைமணி கரு டி.என்.ஏக்களோடு ஒப்பிட்டு ஆய்ந்தார். இவ் ஆய்வின் பயனாக ஆப்பிரிக்காவில் உள்ள நாய்கள் கூட கிழக்கு ஆசியாவில் உள்ள நாய்களின் வழித்தோன்றலாக இருக்ககூடும் என்னும் கருத்து வலுப்படுகின்றது என்கிறார்கள்.
விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி
ஏப்ரல் 2010
சூலை 2007 இல் அமெரிக்க ராணுவ அப்பாச்சி உலங்குவானூர்தி ஈராக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதமற்ற பொதுமக்களை தீவிரவாதிகள் எனக் கருதி சுட்டுக்கொன்றது. இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்களை ஏகே47 வகைத் துப்பாக்கிகள் என்று தவறாக கணக்கிட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
அப்பாச்சியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் காணொளியை விக்கிகசிவுகள் என்கிற தளம் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட காணொளியை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் கோரி வந்தது. இம்முயற்சி பயனளிக்காத நேரத்தில் இந்த காணொளி கசிந்துள்ளது.
முதல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை எடுத்துச்செல்வதற்காக வந்த வாகனத்தையும் தவறாக கணக்கிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமி படுகாயமடைந்தனர். பாலகர்கள் படுகாயம் பற்றி ராணுவ வீரர் கூறும் போது போர் செய்யும் இடத்திற்கு அவர்களை அழைத்துவந்தது தவறு என்று கூறுகிறார்.
இந்தக் காணொளியை யார் தமக்குத் தந்தது என்பதை விக்கிகசிவுகள் இணையத்தளம் வெளியிட மறுத்து விட்டது.
விக்கிகசிவுகள் இணையத்தளம் தகவல் சுதந்திரம் குறித்து போராடி வருகிறது. வெளியுலகிற்குக் கசிந்த தகவல்களை அது இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இக்காணொளி பற்றி பெண்டகன் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை.
அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது
மே 2010
அமெரிக்காவின் விண்ணோடம் அட்லாண்டிஸ் புளோரிடா விண்தளத்தில் இருந்து விண்ணுக்கு கடைசித் தடவையாக ஏவப்பட்டது.
12-நாள் பயணமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்லும் இவ்விண்ணோடம் இரசிய விண்கலம் ஒன்றைக் கொண்டு சென்றுள்ளது. கென் ஹாம், கரெட் ரைஸ்மன், ஸ்டீவன் பவன், மைக்கல் குட், டொனி அண்டொனெலி, பயர்ஸ் செல்லர்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள் இம்முறை அட்லாண்டிஸ் விண்ணோடத்தில் சென்றுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமையன்று மாலை 2:20 மணிக்கு (18:20 UTC) இவ்விண்ணோடம் ஏவப்பட்டது.
அட்லாண்டிசின் இப்பயணத்தை அடுத்து நாசாவின் டிஸ்கவரி, மற்றும் எண்டெவர் ஆகிய விண்ணோடங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறை விண்ணுக்குச் செலுத்தப்படவுள்ளன. இதனையடுத்து விண்ணோடங்களின் பயணங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் இவை அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.
பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும் அப்பால், அதற்கு அப்பால் செவ்வாய்க் கோளை நோக்கி மனிதனை அனுப்பும் புதிய திட்டத்தை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சென்ற மாதம்
அட்லாண்டிஸ் விண்ணோடம் முதன் முதலாக 1985, அக்டோபர் 3 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. அதன் பின்னர் 32 தடவைகள் அது ஏவப்பட்டுள்ளது. மொத்தம் 186,315,249 கிலோமீட்டர் தூரம் அது பயணித்திருந்தது. 4,462 தடவைகள் அது பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றி வந்துள்ளது.
தற்போதைய பயணத்தில் 7 மீட்டர் நீள “ரஸ்வியெத்” என்ற இரசிய விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்துவதற்காக எடுத்துச் சென்றுள்ளது.
மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது
பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீவன் ஹூஸ்டன் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கிபி 350 முதல் 400 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இக்கல்லறை எல் போட்ஸ் என்ற நகரில் உள்ள எல் டயபுலோ பிரமிதின் கீழே உள்ளது. இது கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 15 வியாழக்கிழமை அன்று குவாத்தமாலா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
"கல்லறை வைக்கப்பட்டிருந்த அறையை நாம் திறந்த போது, எனது தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கு நறுமணம் வீசியது, கடும் குளிராகவும் இருந்தது," ஹூஸ்டன் கூறினார். "காற்று, மற்றும் சிறிதளவு நீர் கூடச் செல்லாமல் கல்லறை அடைக்கப்பட்டிருந்தது." கல்லறை மட்டும் 6 அடி உயரமும், 12 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது.
இக்கல்லறையில் இருந்த உடல் வயது போன ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. ஆறு சிறுவர்களின் எலும்புகள் அங்கு காணப்பட்டன. இவற்றில் இரண்டு முழுமையானதாக இருந்தது.
"கல்லறையின் அமைப்பைப் பார்த்தால், இது மாயன் நாகரீகத்தின் நிறுவனருடையதாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம்," என்றார் ஸ்டீவன் ஹூஸ்டன்.
"இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. அரச குடும்பத்துக் கல்லறைகள் நிறைய விபரன்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து அறியப் பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும்," என்றார் அவர்.
நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது
நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த மாதம் நிலவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெற்றியளித்திருப்பதாக நாசாவின் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நிலவின் தென்முனையில் பனிக்கட்டிகளை எடுப்பதற்காக ராக்கெட் ஒன்றை நாசா சென்ற மாதம் மோதவிட்டது. மோதலின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பெருமளவு நீர்-பனிக்காட்டிகளும் நீராவிகளும் அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
"நாம் சிறிதளவை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; குறிப்பிடத்தக்களவு தண்ணீரைக் கண்டுபிடித்துள்ளோம்" என்று தலைமை அறிவியலாளர் அந்தனி கொலப்பிரெட் தெரிவித்தார்.
நிலவில் இவற்றைவிடப் பெருமளவு தண்ணீர்ர் இருப்பதற்கான அறிகுறிகள் மேலும் தென்பட்டால், நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளிவீரர்களுக்கு இது பெருமளவு பயனைக் கொடுக்கும்.
"இதனைக் குடிநீராகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது." எனத் தெரிவித்தார் நாசாவின் நிலவாய்வுத் திட்டத்தின் தலைமை வானியலாளர் மைக் வார்கோ.
1977 இல் செலுத்தப்பட்ட வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் செல்லவிருக்கிறது
செவ்வாய், டிசம்பர் 14, 2010
இதுவரை செலுத்தப்பட்ட விண்கலங்களுள் பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் வொயேஜர் 1 விண்கலம் தற்போது எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே செல்லத் தயாராயிருக்கிறது.
பூமியில் இருந்து தற்போது 17.4 பில். கிமீ (10.8 பில். மைல்கள்) தூரத்தில் வொயேஜர்-1 ஆளில்லா விண்கலம் நிலை கொண்டுள்ளது. இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. "வொயேஜர் விண்ணுக்கு ஏவப்படும் போது, விண்வெளி 20 ஆண்டுகள் மட்டுமே பழமையானதாக எமக்கு இருந்தது. அப்போது இவ்விண்கலம் இவ்வளவு ஆண்டுகாலம் நிலைத்திருக்கும் என எவருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை," என வொயேஜர் திட்ட ஆய்வாளர் எட்வர்ட் ஸ்ரோன் தெரிவித்தார்.
நாசாவின் வொயேஜர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராயவே அனுப்பப்பட்டது. இப்பணியை அது 1989 ஆம் ஆண்டில் முடித்தது. அதன் பின்னர் வொயேஜர் கப்பல் மேலும் ஆழமாக விண்வெளிக்கு, பால் வழி அண்டத்தின் மையத்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது.
விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் நல்ல நிலையில் இயங்குவதாகவும், போதிய தகவல்களை பூமிக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது பால்க்கன் 9 விண்கலம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது பால்க்கன் 9 என்ற விண்கலத்தை முதற்தடவையாக வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவிச் சோதித்தது. எதிர்காலத்தில் மனிதனை ஏற்றிச் செல்லக்கூடிய இவ்விண்கலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை 1845 UTC மணிக்கு ஆளில்லாமல் விண்ணை நோக்கிச் செலுத்தப்பட்டது.
கலிபோர்னியாவைச் சேந்த ஸ்பேஸ் X என்ற நிறுவனம் நசாவின் பண உதவியுடன் இவ்விண்கலத்தை அமைத்திருந்தது.
நேற்று இவ்விண்கலம் முதற்தடவையாக செலுத்தப்பட்ட போது எஞ்சினில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறினால் ஏவுதல் கடைசி செக்கனில் நிறுத்தப்படட்து. பின்னர் எஞ்சின் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஏவப்பட்டது.
பால்க்கன் 9 பூமியின் சுற்று வட்டத்தை அடைந்து விட்டதென்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது முதலாவது பயணத்தில் பால்க்கன் 9 தன்னுடன் டிராகன் சரக்கு விண்கலம் ஒன்றைக் கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் இந்த டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பொருட்களையும் மனிதர்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும்.
இந்தியச் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற ராக்கெட் வானில் வெடித்துச் சிதறியது
தொலைத்தொடர்புச் செயற்கைக் கோள் ஒன்றைக் காவிச் சென்ற இந்தியாவின் ஜி. எஸ். எல். வி ஏவி ஊர்தி ஒன்று ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வானில் வெடித்துச் சிதறியது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணங்களைத் தாம் ஆராய்ந்து வருவதாக இந்திய விண்வெளிக் கழகம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை அன்று மாலை 4மணி 1 நிமிடம் அளவில் இந்தியாவின் புவியிசைவுத் துணைக்கோள் ஏவி (GSLV) ஜிசாட்-5பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளைக் காவிச் சென்ற போது தனது முதலாவது கட்டத்திலேயே திசைமாறிச் செல்ல ஆரம்பித்தது. இதன் பின்னர் பூமியுடனான தொடர்புகள் அறுந்த நிலையில் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதன் சிதறிய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தன.
"முதல் 50 செக்கன்களுக்கு அது திட்டமிட்ட பாதையிலேயே சென்றது. அதன் பின்னர் அது திசை மாறிச் செல்ல ஆரம்பித்து பின்னர் வெடித்தது," என இஸ்ரோவின் தலைவர் கே. இராதாகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் டிசம்பர் 20 ஆம் நாள் இந்த ஏவூர்தி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது, திடீர் தொழில் நுட்ப கோளாறினால் அதன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
எஸ்.எல்.வி- 3, ஏ.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி, என நான்கு வகையான ஏவூர்திகள் மூலம் இந்திய மற்றும் பிற நாட்டு தயாரிப்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. செயற்கைகோள் ஜிசாட்-5பி தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் தொலைதொடர்பு, தொலை மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையை சென்றடையத் தேவையான சக்தியை அளிக்கும் கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பயனைத் தரவில்லை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி எஸ் எல் வி-டி 3 (GSLV-D3) ராக்கெட்டை ஏவும் முதல்முயற்சி கடந்த ஏப்ரல் மாதம் தோல்வியடைந்தது. தற்போது ஏவப்பட்ட ஜி எஸ் எல் வி ராக்கெட்டில் ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?
Priority Inbox ஐ செயல்படுத்த Gmail Settings -> Priority inbox செல்லவும்.
அதில் Show Priority Inbox என்பதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் நமது ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்கள் மூன்று வகையாக
பிரிக்கப்படுகின்றன.

Important - இப்பகுதியில் நாம் முக்கியம் எனக்குறிப்பிடுகிற மின்னஞ்சல்கள் இருக்கும்
Starred - இப்பகுதியில் நாம் நட்சத்திரமிட்ட மின்னஞ்சல்களின் பட்டியல் இருக்கும்
Everything else - முக்கியமற்ற மற்றும் மீதமுள்ள அனைத்து மின்னஞ்சல்களும் இருக்கும்.

Priority inbox செயல்படும் விதம்
இந்த சேவை புத்திசாலித்தனமாக செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.1.நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Send mails)
2.நாம் குறிப்பிட்டு படிக்கும் மின்னஞ்சல்கள், (Read messages)
3.நாம் பதில் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Reply messages)
4.எந்த மாதிரி தலைப்பில் அமைந்த மின்னஞ்சல்களை படிக்கிறோம், (keywords)
5.யாருடைய மின்னஞ்சல்களுக்கு குறியீடு கொடுக்கிறோம் (Starred mails)
போன்றவற்றை வைத்து தானாகவே யாருடைய மின்னஞ்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை தீர்மானித்து கொள்கிறது.
மேலும் ஒரு வசதி என்னவென்றால் ஜிமெயில் தவறாக சில மின்னஞ்சல்களை முக்கியம் என எடுத்துக்கொண்டால் நாம் அதை மாற்றிக்கொள்ளலாம். உங்கள் இன்பாக்ஸிற்கு மேலே மஞ்சள் நிறத்தில் + குறியீடும் , - குறியீடும் இருக்கும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மின்னஞ்சல்களை தேர்வு செய்து + பட்டனை கிளிக் செய்தால் முக்கியமானதாகி விடும். - குறியீடை அழுத்தினால் முக்கியத்துவம் அற்றதாகிவிடும்.

மேலும் மின்னஞ்சலின் அருகில் உள்ள நட்சத்திரக் குறியீடை கிளிக் செய்தால் அவர்களும் தனியாக Starred என்ற பகுதியில் வந்துவிடுவார்கள். படிப்பதற்கும் எளிதாக இருக்கும்.
கூடுகள்