வணக்கம் தமிழகம்
.........அறிவியல் தவல்கள்.........
Blog Archive
Thursday, July 14, 2016
Sunday, November 9, 2014
மோகத்தைக் கொன்றுவிடு!
மோகத்தைக் கொன்றுவிடு!
பிடிவாதம் நல்லதில்லை. ஆனால், அதையே கொள்கைப் பிடிப்பு என்று வேறு பெயரிட்டு அழைத்தால் அந்தச் சொல்லுக்குள் ஓர் உயர்வு இழைவதைக் காணலாம். நீரிழிவு நோய் கொண்ட ஒருவர் அன்றாடம் ஆசை ஆசையாய் இனிப்புகளை அதிகம் உண்டால் அதனைக் கொள்கைப் பிடிப்பு என்றா கூற முடியும்?
உலக வரலாற்றில் மிகுதியாகிப்போன விருப்பங்களால் பல பேரரசுகள் உருண்டன; பலரின் வாழ்க்கை சரிந்தது. புகழின் உச்சியில் உலவிக் கொண்டிருந்த பலர் புதைகுழிக்குள் அடக்கமானார்கள்.
பற்று என்பது விருப்பத்தின் அழுத்தமான வெளிப்பாடு. மொழிப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று இவையெல்லாம் நன்மைக்கு உரியவை. கொடிகாத்த குமரனை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால், தனிமனித விருப்பம் தீயனவற்றை விளைவிக்குமானால் அது மோகம் ஆகிவிடும்.
இதற்குச் சரியான சான்று சிலப்பதிகாரக் காப்பிய நாயகன் கோவலன். மாதவியின் இல்லத்துக்குப் போன அவன் மிகுதியான வேட்கையால் தன் மனைவியையே மறந்தான் என்பதுதான் கதை. அதனை விளக்கும்போது இளங்கோவடிகளின் எழுதுகோல் தீட்டும் வரி: "விடுதலறியா விருப்பினன் ஆயினான்'.
ஒன்றின்மேல் அல்லது ஒருவரின்மேல் ஏற்பட்ட விருப்பம் அதிலிருந்து அல்லது அவரிடமிருந்து விடுதலை பெற முடியாதவண்ணம் உடும்புப்பிடியாகி இறுகும்போது அது காதலில்லை; அன்பு இல்லை; பற்று இல்லை; மோகம் மட்டுமே. சொந்த மனையை மறக்கடிக்கச் செய்த மோகம்தான் கோவலனைப் பாழ்படுத்தியது; கண்ணகியைக் கலங்கடித்தது.
இன்றைய மனிதர்களைப் பீடித்துள்ள மோகங்கள் பலப்பல. குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற சூது கவ்வும் மோகம்; பிறமொழி மோகம்; பெண் மோகம்; பதவி மோகம்; குடி மோகம் போன்று பற்பல மோகங்கள் மனிதர்களை கவருகின்றன. விட்டில் பூச்சிகளாகப் போனவர்களின் வாழ்க்கை, பிறருக்குரிய பாடங்களாவதும் உண்டு.
சிறிது நேரம், சிலகாலம் மட்டும் பற்றிக்கொள்ளும் சின்னச்சின்ன மோகங்களும் உண்டு. நடிகர் ஒருவரின் பெயரைத் தம்பெயருக்கு முன்னால் இணைத்துக் கொள்வது;
அடிக்கடி இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளை மாற்றிக் கொண்டிருப்பது.
பெண்களில் சிலர் தங்க நகைகளை அவ்வப்போது புதிய வடிவுகளுக்காக உருக்கிஉருக்கித் தங்களின் சேமிப்பினைச் சேதாரமாக்கிக் கொள்வர். சுற்றுலா செல்வதில் சிலரின்
மோகம் வெளிப்படும். இவை போன்றவற்றால் பெரிய தீமைகள் ஏற்படுவதில்லை. ஆனால், சில மோகங்கள் பேருரு (விசுவரூபம்) எடுத்து எல்லாத் திசையிலும் சிக்கல்களைப் பயிராக்கும்.
இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. அதைப் பெறத் தம்மைக் கரைத்துக் கொண்டவர் அண்ணல் காந்தியார். புதிய இந்தியா அரும்பியதும் காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச்
சொன்னதைவிடத் தமக்கு எந்தப் பதவியும் வேண்டாமென்று சொன்னதுதான் அவருக்கு மகாத்மா என்ற உயர்வை வழங்கியது.
இன்றைக்குப் பதவி மோகத்தால் எல்லா நடுகளிலும் நிகழ்கின்ற கொடுமைகளை எண்ணி முடியாது. யாராவது ஓர் அரசியல் தலைவர் நெஞ்சைத் தொட்டு, "நான் இந்தக்
கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கு மாறுவது மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக மட்டுமே' என முழங்குவாரா?
தன் அரியணைக்கு ஆசைப்படும் இரண்டாம் கட்டத் தலைவர்களை ஓரங்கட்டுவது அல்லது ஒழித்துக்கட்டுவது ஒரு காட்சி. ஒருவரே கட்சி தாவிக் கட்சிதாவித் தன் நிறத்தை
மாற்றிக் கொள்ளும் பச்சோந்தித்தனம் இன்னொரு காட்சி. நேற்றுவரை எந்தத் தலைவரை அல்லது எந்தக்கட்சியைச் சாடிநின்றாரோ அந்தத் தலைவரின் காலடியில் வீழ்வதும்
அந்தக் கட்சியில் இணைவதும் எதில் சேர்த்தி?
கடைசிவரை எந்தப் பதவியிலாவது இருக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஒரு பக்கம். மறுபக்கம் அந்தத் தலைமைபோலத் தமக்கும் ஒரு தலைமை
வேண்டுமெனக் கருதியவர்களால் புதுக்கட்சிகளின் புறப்பாடு.
கட்சி உடைப்பு, பொய் வழக்குகள், ஆட்சிக் கவிழ்ப்பு, வாரிசு அரசியல், அதிகார போதை, பொய்யான வாக்குறுதிகள், மர்மக் கொலைகள் இவையெல்லாம் பதவிமோகம்
காரணமாக அரசியலரங்கில் அரங்கேற்றப்படும் அன்றாட நிகழ்வுகளாகிப் போயின.
தன்னுடைய ஆட்சியில் தானே தவறு செய்தமைக்காகக் கண்ணகிக்கு முன் தன் ஆயுளை முடித்துக்கொண்ட பாண்டிய மன்னன் முதல், அரியலூரில் ஏற்பட்ட விபத்துக்காகத்
தான் வகித்துவந்த தொடர்வண்டித்துறை (தஹண்ப்ஜ்ஹஹ்) அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய நடுவணரசு அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி வரை பலரையும் இந்த நாடு
கண்டதுண்டு.
வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம். பலநாட்டுத் தமிழர்கள் ஒருங்கு கூடியிருந்த நிகழ்ச்சி. இரவில் தூங்கி விடிகாலையில் எழுந்து சிறிது நேரம் சென்றபின்
ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்த பொழுது, தமிழகத்திலிருந்து அங்கே வந்திருந்த ஓரன்பர் வெளிநாட்டுத் தமிழர்களிடம் கேட்ட கேள்வி "என்னங்க பிரேக்பாஸ்ட்
முடிஞ்சுதா' என்பதுதான். பக்கத்திலேயே மலேசிய நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் தமிழக அன்பர்களிடம் முன்வைத்த வினா: "ஏனுங்க பசியாறிட்டீங்களா?'
இரவில் உறங்கி, காலையில் எழுந்து, கடமைகள் முடிக்கப்பட்ட சூழலில் மனிதர்கட்குப் பசி ஏற்படும். காலையுணவு உண்டபின் பசி நீங்கும். அதனை அழகு தமிழில்
"பசியாறிட்டீங்களா' என வினவும் அயலகத் தமிழர்களால்தான் தமிழ் வாழ்கிறது.
ஆசுகார் விருது பெற்றபோது அந்த அரங்கிலிருக்கும் எவருக்கும் தமிழ் தெரியாது என்ற போதும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தமிழில் சொன்ன ஏ.ஆர்.
இரகுமானையும் தமிழர் திருநாளான பொங்கலன்று ஏஅடடவ டஞசஎஅக என ஆங்கிலத்தில் எழுதிவைக்கும் தமிழக மக்களையும் பக்கத்தில் வைத்து ஒப்பீடு செய்து
பாருங்கள். உண்மை சுடும்.
சோறு என்பது நல்ல தமிழ்ச் சொல். சீவகசிந்தாமணி "சொல்லரும் சூர்ப்பசும்' என்ற தொடரை வழங்கும். சொல் என்பது நெல்லின் மாற்றுச் சொல். சொல் (நெல்) கொண்டு
ஆக்கப்படுவது சோறு ஆனது (கெடுதி கேடு ஆவதைப்போல).
ஆனால், சோறு என்பது தீண்டத்தகாத சொல்லாக, பாமரர் சொல்லாக, கிராமப்புற சொல்லாகக் கருதப்பட்டது, அதற்கு நிகராகச் சாதம் என்ற சொல் பரிமாறப்பட்டது. பந்தி
நடைபெறும் இடத்தில் நின்று கொண்டு கொஞ்சநேரம் கவனியுங்கள்.
சாப்பிடுபவர்களின் இலைகளில் சோறு இல்லையென்றால் அல்லது குறைவாக இருந்தால் பந்தியைக் கவனிப்பவர்கள் "இங்கே கொஞ்சம் ரைஸ் கொண்டாங்க', "யார் கிட்ட
ரைஸ் இருக்கு?' என்றெல்லாம் கூவக் கேட்கலாம். இது நடப்பியல்.
ஒருமுறை தேவநேயப் பாவாணர் உணவருந்திக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர் உணவு பரிமாறுபவர்களிடம் கொஞ்சம் ரைஸ் போடுங்க என்றார். பரிமாற
வந்தவரைத் தடுத்த பாவாணர், கிடுகிடுவெனப் பண்டசாலைக்குப் போனார். ஒரு பிடி அரிசியை எடுத்தார். உணவு கேட்டவரின் இலையில் இட்டார். "இதுதான் நீங்க கேட்ட
ரைஸ் சாப்பிடுங்க' என்றார். ரைஸ் என்பதற்கு அரிசி என்பதுதான் அகராதிப் பொருள்.
பெண் மோகம். பலபேரின் சறுக்கல்கள், வீழ்ச்சிகள், களங்கங்கள், உயிரிழப்புகள் போன்றவை இம்மோகத்தினால்தான் ஏற்பட்டன. தன்னுடைய ஆசை நங்கைக்காகத்
திருடப்போய், காலிழந்து நொண்டியாகிப்போன ஒருவன் காம மோகம் காரணமாகத் தனக்கேற்பட்டதை விவரிக்கும் நாட்டுப்புற நாடகம் நொண்டி நாடகம் எனப்படும்.
ஒற்றையாள் அரங்கு அது.
பெண் பித்து, ஆசைப் பேய், காமப் பிசாசு என்ற சொல்லாட்சிகள் பெண்
மீதான காம வெறியை எடுத்துக்காட்டும். "பொம்பளை பொறுக்கி' என்பது கிராமப்புற வழக்கு. வெளியே தெரியாதவாறு எத்தனைபேர் பல குடும்பங்களை அமைத்துள்ளனர்.
ஆடவர்களைப் போலவே பெண்களிலும் சிலர் (சூர்ப்பநகை
போலத்) தென்படலாம்.
பெரும்பான்மையான தவறுகளுக்கு இந்தப் பெண் மோகமே காரணமென்கின்றனர் சமூகவியலார். வருவாய்க்கு மேல் தகாத வழியில் பொருளீட்டுபவர்களின் பின்னணியில்
பெண்களின் இருப்பு இருப்பதை இன்றைய சூழல் தெளிவுறக்காட்டும். ஆடவர்களின் மேனித்தினவுக்காக இரையாகும் நங்கைகள் எத்தனை பேர்?
வறுமைக்காகத் தம் உடலை விற்கும் பெண்ணொருத்தி கொடியபாவி என்றால், தன் உடற்பசிக்காகப் பல மங்கைகளைப் பாழ்படுத்தும் ஆடவரை என்ன சொல்லிக் குறிப்பது?
ஊடகங்கள், செய்தி ஏடுகளில் அன்றாடம் "கள்ளக்காதல்' என்பது இடம்பெறுவதை மறுக்க இயலுமா?÷
நலமான வாழ்வை நாசப்படுத்தும் இவைபோன்ற மோகங்களைக் கண்டுணர வேண்டும். எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் இத்தகைய மோகங்களை வேரறுக்க
விழைபவர்கள் உரத்து ஒலிக்க வேண்டிய பாரதியின் வரி ஒன்றுண்டு அதுதான் - "மோகத்தைக் கொன்றுவிடு'.
கட்டுரையாளர்: பேராசிரியர், மையப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
Saturday, March 26, 2011
நண்பர்களே என்னுடைய புதிய செய்தி ப்ளாக் ய் பார்வை இட தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
Saturday, January 8, 2011
இராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது
நாசாவின் மீளப்பாவிக்கப்படும் விண்ணோடத்தை (space shuttle) ஒத்த X-37B என்ற இந்த விண்வெளி வானூர்தி வியாழக்கிழமை அன்று கேப் கனவரல் வான் படைத்தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 1952 (2352 GMT) மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
ஆளில்லாமல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அமெரிக்க வண்வெளித் திட்டத்தில் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விண்வெளியில் மேற்கொள்ளும் பரிசோதனைத் தரவுகளை மேலதிக ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பும்.
9மீ நீளமும் 4.5மீ மொத்த அகலமும் கொண்ட இந்த மீளப் பாவிக்கப்படத்தக்க வானூர்தி விண்ணோடங்களுடன் ஒப்பிடும் போது அவற்றின் நான்கில் ஒரு அளவையே கொண்டுள்ளது. சுற்றுப்பாதை மாற்றத்திற்காக இதன் எந்திரம் வானூர்தியின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இராணுவ வானூர்தி விண்ணோடங்களைப் போலல்லாது, லித்தியம்-அயன் மின்கலங்களையும், சூரிய ஆற்றலையுமே தனது இயக்கத்துக்கு பாவிக்கிறது.
இத்திட்டத்தின் செலவு, மற்றும் நோக்கம் போன்றவை வெளிப்படுத்தப்படவில்லை.
X-37B என்ற இந்த விண்கலம் 270 நாட்கள் வரை பூமியைச் சுற்றிவரும் ஆற்றல் கொண்டது. ”இது எப்போது திரும்பி வரும் என்று எமக்கு உறுதியாகத் தெரியாது. இது மேற்கொள்ளும் பரிசோதனைகளின் வெற்றியிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது," என்றார் அமெரிக்க வான் படையின் பேச்சாளர் காரி பேய்ட்டன்.
X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம்
டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்
செப்டம்பர் , 2010
ஐக்கிய அமெரிக்காவில் "டிஸ்கவரி சானல்" தலைமையகத்தில் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பணயக் கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேரிலாந்தில் உள்ள தலைமையகக் கட்டிடத்தினுள் கைத்துப்பாக்கியுடனும், வெடிபொருட்களை உடலில் கட்டியவண்ணமும் நேற்று பிற்பகல் அந்த நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்நபர் வெடிபொருட்களை வெடிக்க வைக்க இருந்த நேரத்திலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜேம்ஸ் ஜேய் லீ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதுடையவர். இவர் கட்டிடத்துக்கு வெளியே பல தடவைகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் சான் டியேகோவைச் சேர்ந்த ஜேம் லீ 2008 ஆம் ஆண்டில் டிஸ்கவரி தலைமையகத்தின் முன்னால் அந்நிறுவனத்துக்கு எதிராகக் கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுக்களை வீசி எறிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் என த கசெட் என்ற உள்ளூர்ப் பத்திரிகை தெரிவித்துள்ளது. புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி நிறுவனம் முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு ஆகும்.
savetheplanetprotest.com என்ற இணையத்தளத்தையும் அவர் பராமரித்து வந்தார். புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி சானல் உதவ வேண்டும் என அவ்விணையத்தளத்தின் மூலம் கோரி வந்தார்.
இம்மனிதரைத் தாம் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் ஆனால் “அவரது கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,” என டிஸ்கவரி பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிஸ்கவரி சானல் உலகம் முழுவதிலும் சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன
ஆகஸ்ட் 2009, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா:
நாய்கள் எவ்வாறு வளர்ப்பு நாய்களாக மாறின? நாய்களின் படிவளர்ச்சியில் எப்படி இது ஒரு தனிப் பேரினமாக வளர்ச்சியுற்றது எனப் பல கேள்விகள் அண்மையில் எழுந்துள்ளன.
வீட்டு நாயாக பழக்கப்படுத்தாமல், உலகில் பல்வேறு சிற்றூர்களில் திரியும் பல நாய்களின் மரபணுக்களை அலசியபொழுது புதிதாக நுழைந்த மரபணுக்களும், இயற்கையாக இருந்த மரபணுக்களும் கலந்து இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
இக்கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள இத்தாக்காவில் உள்ள கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆடம் பாய்க்கோ (Adam Boyko) என்பவர் செய்தார்.
இவர் ஆப்பிரிக்காவில் ஏழு வெவ்வேறு இடங்களில் இருந்து 318 நாய்களின் இழைமணி கரு டி.என்.ஏவை (மைட்டோகோண்டிரியல் நியூக்கிளியர் டி.என்.ஏ) திரட்டி எடுத்து கரிபியன் தீவுகளுக்கு அருகே உள்ள புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள தெரு நாய்கள், அமெரிக்காவின் மட் (mutt) எனப்படும் கலப்பு இன நாய்கள், மற்றும் 126 வகையான ஏற்புபெற்ற தனி நாய் இனங்கள் ஆகியவற்றின் இழைமணி கரு டி.என்.ஏக்களோடு ஒப்பிட்டு ஆய்ந்தார். இவ் ஆய்வின் பயனாக ஆப்பிரிக்காவில் உள்ள நாய்கள் கூட கிழக்கு ஆசியாவில் உள்ள நாய்களின் வழித்தோன்றலாக இருக்ககூடும் என்னும் கருத்து வலுப்படுகின்றது என்கிறார்கள்.
விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி
ஏப்ரல் 2010
சூலை 2007 இல் அமெரிக்க ராணுவ அப்பாச்சி உலங்குவானூர்தி ஈராக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதமற்ற பொதுமக்களை தீவிரவாதிகள் எனக் கருதி சுட்டுக்கொன்றது. இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்களை ஏகே47 வகைத் துப்பாக்கிகள் என்று தவறாக கணக்கிட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
அப்பாச்சியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் காணொளியை விக்கிகசிவுகள் என்கிற தளம் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட காணொளியை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் கோரி வந்தது. இம்முயற்சி பயனளிக்காத நேரத்தில் இந்த காணொளி கசிந்துள்ளது.
முதல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை எடுத்துச்செல்வதற்காக வந்த வாகனத்தையும் தவறாக கணக்கிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமி படுகாயமடைந்தனர். பாலகர்கள் படுகாயம் பற்றி ராணுவ வீரர் கூறும் போது போர் செய்யும் இடத்திற்கு அவர்களை அழைத்துவந்தது தவறு என்று கூறுகிறார்.
இந்தக் காணொளியை யார் தமக்குத் தந்தது என்பதை விக்கிகசிவுகள் இணையத்தளம் வெளியிட மறுத்து விட்டது.
விக்கிகசிவுகள் இணையத்தளம் தகவல் சுதந்திரம் குறித்து போராடி வருகிறது. வெளியுலகிற்குக் கசிந்த தகவல்களை அது இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இக்காணொளி பற்றி பெண்டகன் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை.
கூடுகள்